யு டி ஆர் என்ற நில உடைமை மேம்பாட்டு தி்ட்டம் தமிழ்நாட்டில் 1986 முதல் 1989 வரையிலான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்படி, பூமியில் உள்ளது உள்ளவாறு, அதாவது பட்டா நிலமாக இருப்பினும் அதில் பாதையோ அல்லது குளமோ எதுவாக இருப்பினும் அவ்வாறே வருவாய்த் துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. மேலும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் முதாதையர்கள் சொத்துக்களை பராமரித்து வந்த நில உடையமையாளர்கள் பெயர்களில் பட்டா பதிவு செய்யப்பட்டது. அரசு புறம்போக்கு நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளில் இருந்தால், அதாவது பாதை, தரிசு, குன்று, குளம், சுடுகாடு வாய்க்கால் என்று பூமியில் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே வகைப்பாடு செய்யட்டது.
